செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 106 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,157 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,86,457 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,288 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.07 சதவீதமாக குறைந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,68,627 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,43,01,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.