செய்திகள்
மரணம்

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம்

Published On 2021-02-27 10:48 GMT   |   Update On 2021-02-27 15:55 GMT
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர் ஆலங்குளத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆண்டுதோறும்அவர் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் இருந்து ஊழியர்களை சுற்றுலா அழைத்து செல்வார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் கேரள மாநிலம் திருச்சூருக்கு 2 பஸ்களில் அவர்கள் சென்றனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் அனைவரும் குளித்துக்கொண்டிந்தனர். அப்போது குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தடுமாறி நீரில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News