செய்திகள்
ராகுல் காந்தி

திருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி

Published On 2021-02-26 19:30 GMT   |   Update On 2021-02-26 19:30 GMT
திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகப் பொதுமறை நூலான திருக்குறள் சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு மாநில மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மத்திய அரசியல் தலைவர்கள் தங்களது மேடைப் பேச்சுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதும் இதற்கு ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பல சமயங்களில் திருக்குறளை உதாரணமாகப் பயன்படுத்தி, அரசியல் விழாக்களில் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் கவனமும் தற்போது திருக்குறளின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தி உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தற்போது திருக்குறளை வாசித்து வருகிறேன். திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News