செய்திகள்
தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளாவிற்கும் ஒரே கட்டமாக தேர்தல்: வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட முழு விவரம்....
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அரோரா தேதியை அறிவித்தார். அப்போது ‘‘ தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும், மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
மார்ச் 12-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19-ந்தேதி கடைசி நாளாகும். மார்ச் 20-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22-ந்தேதியாகும்.
அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடைபெறும்’’ என்றார்.