செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர் பலி... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-02-26 04:30 GMT   |   Update On 2021-02-26 04:30 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,577 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,63,491 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 120 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,825 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,50,680 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12,179 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.17 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,55,986 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 8,01,480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News