செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

டெல்லி விவசாயிகளை புறக்கணித்துவிட்டு கேரள விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் ராகுல்காந்தி -பினராயி விஜயன்

Published On 2021-02-25 21:53 GMT   |   Update On 2021-02-25 21:53 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளை புறக்கணித்து விட்டு ராகுல்காந்தி கேரளாவில் விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திரிகைபட்டா முதல் முட்டில் வரையிலான 6 கிலோமீட்டர் தொலைவுக்கு டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி பங்கு கொண்டார்.

அதன்பின் பூத்தாடி பஞ்சாயத்தில் குடும்பஸ்ரீ சார்பில் நடந்த திட்டங்களை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், 'காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரளாவிற்கு வந்து டிராக்டரில் பயணம் செய்கிறார். மீனவர்களுடன் கடலுக்குச் செல்கிறார். டெல்லியில் பல நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதனை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டார். அங்கு சென்று போராடவில்லை. ஆனால் ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார்.
கேரளா மீதான அவரது அக்கறைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றார்.
Tags:    

Similar News