செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

கர்நாடகாவில் இன்று 453 பேருக்கு கொரோனா தொற்று: 7 பேர் உயிரிழப்பு

Published On 2021-02-25 15:45 GMT   |   Update On 2021-02-25 15:45 GMT
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் இதுவரை 9,49,636 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,31,725 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,316 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News