செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை (கோப்புப்படம்)

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,218 பேருக்கு கொரோனா தொற்று: 51 பேர் பலி

Published On 2021-02-23 15:26 GMT   |   Update On 2021-02-23 15:26 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,12,312 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 20,05,851 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 51 பேர் உயிரிழக்க இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51,857 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 53,409 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன.

இன்று கேரளாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாநிலங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News