செய்திகள்
கோப்பு படம்.

கேரளாவில் இன்று 2,212 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-22 15:03 GMT   |   Update On 2021-02-22 15:03 GMT
கேரளாவில் இன்று 2,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று 2,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,037- ஆக உள்ளது. தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 55,468- ஆக இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 77 ஆயிரமாக 012- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம் ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,105- ஆக உள்ளது.
Tags:    

Similar News