செய்திகள்
ஷாகன் புஞ்பால்

மராட்டிய மந்திரி ஷாகன் புஞ்பாலுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-02-22 12:00 GMT   |   Update On 2021-02-22 12:00 GMT
மராட்டிய மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ஷாகன் புஞ்பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு உருமாறிய கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்துள்ளது. இந்தநிலையில் மராட்டிய மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ஷாகன் புஞ்பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதை அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னுடன் கடந்த 3 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. 

யாரும் கவலைப்பட வேண்டாம். அனைத்து மக்களும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்’ என்றார். இந்த மாதத்தில் மட்டும் மராட்டிய மாநிலத்தில் 7 மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News