செய்திகள்
சோனியா காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2021-02-21 12:53 GMT   |   Update On 2021-02-21 12:53 GMT
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டி விற்பனையாகிறது.  

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சோனியா காந்தி, விலை உயர்வை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

Similar News