செய்திகள்
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,650- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,650- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,650- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,840- பேர் குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,074- ஆக உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 67 ஆயிரமாக உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 58,606- ஆக உள்ளது.