செய்திகள்
அசாம், மேற்கு வங்கத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி நாளை மறுநாள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அசாம் மாநிலம் தேமாஜியில் இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சிலாபதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அதன்பின்னர் மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹுக்ளியில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமரின் சுற்றுப்பயணம் முடிந்ததும், உள்துறை மந்திரி அமித் ஷா 25ம் தேதி அசாம் செல்கிறார். அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள படத்ரவா மடாலயம், படத்ரவா சத்திரத்திற்கு செல்கிறார். அத்துடன், அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார் என மாநில மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள திபுவையும் அமித் ஷா பார்வையிடுவார். அங்கு மற்றொரு பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.