செய்திகள்
ஜெயந்த் பாட்டீல்

மராட்டியத்தில் மீண்டும் தொற்று அதிகரிப்பு : மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா

Published On 2021-02-18 20:02 GMT   |   Update On 2021-02-18 20:02 GMT
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மும்பை:

நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா இந்த மாதம் முதல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. 2 ஆயிரத்துக்கு கீழ் வந்த தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 787 ஆக அதிகரித்தது. மேலும் இந்த மாதம் தொடக்கம் முதல் மராட்டிய மந்திரிகள் அனில் தேஷ்முக், சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலை கொரோனா தாக்கி உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 12-க்கும் மேற்பட்ட மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது நினைவுக்கூரத்தக்கது.
Tags:    

Similar News