மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 2,543 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,87,804 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழக்க, இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 51,669 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 40,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.