செய்திகள்
கோப்பு படம்.

மராட்டியத்தில் மேலும் 3,611 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-13 16:52 GMT   |   Update On 2021-02-13 16:52 GMT
மராட்டியத்தில் இன்று மேலும் 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு அதிகமாகவே உள்ளது.  இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,611 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,60,186 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இன்று மேலும் 38 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 51,489 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று மேலும் 1773 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 19,74,248 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 33,269 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News