செய்திகள்
பாராளுமன்றம்

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு - எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க உத்தரவு

Published On 2021-02-12 23:09 GMT   |   Update On 2021-02-12 23:09 GMT
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதையொட்டி பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க கொறடா உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதில் மாநிலங்களவை நேற்றே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவை மட்டும் இன்று நடைபெறுகிறது.

எனவே வழக்கமாக 4 மணிக்கு கூடி வந்த மக்களவை, இன்று காலை 10 மணிக்கே கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

எனவே பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சில முக்கியமான மசோதாக்களின் விவாதம் மற்றும் நிறைவேற்றம் போன்ற அலுவல்கள் இருப்பதால் எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News