செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்

விசாகப்பட்டினம் அருகே சோகம் - பள்ளத்தாக்கில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

Published On 2021-02-12 18:18 GMT   |   Update On 2021-02-12 18:18 GMT
விசாகப்பட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
விசாகப்பட்டினம்:

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தின் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே சாலையில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 

இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்த சில பயணிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாக  கூறப்படுகிறது. 

காயமடைந்தவர்கள் ஆம்புலன்சில் விசாகப்பட்டினம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News