செய்திகள்
நிலநடுக்கம்

டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Published On 2021-02-12 17:51 GMT   |   Update On 2021-02-12 17:51 GMT
டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் இன்று இரவு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஜம்முவில் இன்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வின் தாக்கம் உத்தரகாண்ட் மற்றும் நொய்டா பகுதியிலும் எதிரொலித்தது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்று இரவு 10.34 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதேபோல், மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் இரவு 10.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

Similar News