செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.