செய்திகள்
பிரியங்கா காந்தி

“வெட்கம் இல்லாத பிரதமர் மோடி அரசு” - பிரியங்கா காந்தி சாடல்

Published On 2021-02-07 12:22 GMT   |   Update On 2021-02-07 12:22 GMT
வெட்கம் இல்லாத பிரதமர் நரேந்திர மோடி அரசு என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி: 

ராணுவத்தில் விடுப்பு கிடைத்ததும், வாழ்வாதாரத்திற்காக டெல்லி எல்லையில் போராடி வரும் தனது தந்தையை சந்திக்க வந்த ஜவான் கண்ணீர் வடித்ததாக பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார். 

75 நாட்களாக, அவரது தந்தை தனது பிழைப்புக்காக போராடி வருகிறார் என்றும், ஆனால் அவர்களை பயங்கரவாதிகள், துரோகிகள் மற்றும் சதிகாரர்கள் என  முதலாளித்துவ அரசு சித்தரிக்க முனைவதாக பிரியங்கா காந்தி தமது பதிவில் சாடியுள்ளார். 

மேலும் போராடுபவர்களை அவ்வாறு அழைக்கும் அரசு வெட்கம் இல்லாதது எனவும் தமது பதிவில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News