செய்திகள்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்துகிறது. இதில் இரு தரப்பிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி எல்லையில் நேற்று இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திய வீரர் லட்சுமணன் உயிரிழந்தார்.
இந்த சண்டையைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் உருவானது. எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.