செய்திகள்
எம்.எல்.ஏ தீபக் ஹல்தார்

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா

Published On 2021-02-01 20:39 GMT   |   Update On 2021-02-01 20:39 GMT
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியி்ல் ஐக்கியமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் டைமண்ட் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வான தீபக் ஹல்தார் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் எனது பணியை செய்ய கட்சி தலைமை அனுமதிப்பதில்லை. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். இதுகுறித்து மாவட்ட, மாநில தலைமைக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News