செய்திகள்
நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

Published On 2021-01-30 20:32 GMT   |   Update On 2021-01-30 20:32 GMT
மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.2 ஆக அந்த நில நடுக்கம் அளவிடப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 12.41 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

நிலநடுக்கத்தின் அளவு குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News