செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

6 நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

Published On 2021-01-28 12:05 GMT   |   Update On 2021-01-28 12:05 GMT
குறுகிய நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் நாடு இந்தியா என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 16-ந்தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் 10 நட்களில்தான் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஸ்பெயினில் 12 நாட்களிலும், இஸ்ரேலில் 14 நாட்களிலும், இங்கிலாந்தில் 18 நாட்களிலும், இத்தாலியில் 19 நாட்களிலும், ஜெர்மனியில் 20 நாட்களிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 நாட்களிலும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் இரண்டு மாநிலங்களில்தான் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் 44 ஆயிரம் பேரும், கேரளாவில் 72 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News