செய்திகள்
சசிகலா

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை

Published On 2021-01-27 07:45 GMT   |   Update On 2021-01-27 07:45 GMT
சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகலில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை வருமாறு:-

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தனக்கு தேவையான உணவை தானே உட்கொள்கிறார். அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் செயற்கை சுவாச கருவி இல்லாமல் இயல்பாக சுவாசித்து வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகலில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை.

எனவே கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால் அவர் கொரோனா வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். பின்னர் அவர் தொடர் சிகிச்சையை விக்டோரியா அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்வார். இதை அவரது உறவினர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

Tags:    

Similar News