செய்திகள்
டெல்லி ஐடிஓ பகுதியில் போலீஸ் தடியடி: 3 பேர் காயம்
டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளை நீக்கியதால் தடியடி நடத்தப்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லி போலீசார் கடும் நிபந்தனைகளுடன் மூன்று பாதைகளில் மட்டும் பேரணி நடத்தினர். ஆனால் விவசாயிகள் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்குள் செல்ல முயன்றனர்.
போலீசார் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. தடுப்புச்சுவர்களை அப்புறப்படுத்தி டெல்லிக்குள் நுழைந்தனர். மத்திய டெல்லி ஐடிஓ பகுதியில் விவசாயிகள் நுழைந்தபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியுளுள்ளது.
விவசாயிகள் தனித்தனி குழுவாக பிரிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.