செய்திகள்
விவசாய சங்க தலைவர் தர்ஷன் பால்

பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாய சங்கம் அறிவிப்பு

Published On 2021-01-25 12:56 GMT   |   Update On 2021-01-25 12:56 GMT
டெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

நாளை விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துகிறார்கள். இந்த நிலையில் பிப்ரவரி 1-ந்தேதி டெல்லியின் பல்வேறு இடங்களில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கால்நடையாக பேரணி செல்வோம் என கிராந்திகரி கிஷான் யூனியனின் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News