செய்திகள்
ஆகாஷ் என்ஜி ஏவுகணை

டிஆர்டிஓ நடத்திய ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி

Published On 2021-01-25 12:02 GMT   |   Update On 2021-01-25 14:05 GMT
ஒடிசா ஏவுகணை சோதனை மையத்தில் நடத்திய ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான பெரும்பாலான தடவாளங்களை டிஆர்டிஓ தயாரித்து கொடுக்கிறது. அந்த வகையில் ஆகாஷ்-என்ஜி (New Generation) ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை இன்று முதன்முறையாக ஒடிசா தளத்தில் பரிசோதனை செய்தது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான்நோக்கி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும். இந்திய விமானப்படைக்கு வான் எல்லையில் உயர் அச்சுறுத்துலாக விளங்குவதை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News