செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் மொத்த பாதிப்பு 1.06 கோடி, குணமடைந்தவர்கள் 1.03 கோடி... கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-01-23 05:19 GMT   |   Update On 2021-01-23 05:19 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,256 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,39,684 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 152 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,184 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,300,838 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17,130 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.82 சதவீதமாக உள்ளது. 

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,85,662 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 13,90,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News