செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா

Published On 2021-01-22 02:05 GMT   |   Update On 2021-01-22 02:05 GMT
கர்நாடகத்தில் புதிதாக 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 674 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 252 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக உள்ளது. பல்லாரியில் 7 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகரில் தலா 13 பேர், பெங்களூரு நகரில் 371 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் ஒருவர், சிக்பள்ளாப்பூரில் 18 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், சித்ரதுர்காவில் 6 பேர், தட்சிண கன்னடாவில் 39 பேர், தாவணகெரேயில் 7 பேர், தார்வரில் 9 பேர், கதக்கில் ஒருவர், ஹாசனில் 16 பேர், ஹாவேரியில் 3 பேர், கலபுரகியில் 40 பேர், குடகில் 5 பேர், கோலாரில் 10 பேர், கொப்பலில் ஒருவர், மண்டியாவில் 6 பேர், மைசூருவில் 35 பேர், ராய்ச்சூரில் ஒருவர், ராமநகரில் 2 பேர், சிவமொக்காவில் 17 பேர், துமகூருவில் 26 பேர், உடுப்பியில் 7 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், விஜயாப்புராவில் 2 பேர், யாதகிரியில் 3 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் நேற்று கொரோனாவுக்கு பாதிப்பு இல்லை.

பெங்களூரு நகர், தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். 28 மாவட்டங்களில் நேற்று உயிரிழப்பு இல்லை. நேற்று 815 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 492 ஆக உயர்ந்து உள்ளது. 7 ஆயிரத்து 554 பேர் சிகிச்சையில் உள்ளனர். 171 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட:டு உள்ளனர். 88 ஆயிரத்து 855 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 63 லட்சத்து 6 ஆயிரத்து 608 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News