செய்திகள்
சீரம் நிறுவனத்தில் தீ விபத்து

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து

Published On 2021-01-21 09:59 GMT   |   Update On 2021-01-21 09:59 GMT
புனேவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
புனே:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. 

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News