விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தன.
இதனால், 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை (11-ம் கட்ட பேச்சுவார்த்தை) வரும் 22-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களை ஏற்கனவே ஒன்றையாண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டதாக மத்திய அரசு கூறியது. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் எந்த உபயோகமும் இல்லை. சட்டத்தை முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.
மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன். 22-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படலாம்.
என்றார்.