செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்ஷய் குமார் வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கு பிரபல நடிகர் அக்ஷய் குமார், வேண்டுகோள் விடுத்துள்ளார்
மும்பை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நன்கொடை திரட்டப்படுகிறது. இந்த நிலையில் தானும் நன்கொடை வழங்கி விட்டதாக கூறியுள்ள பிரபல நடிகர் அக்ஷய் குமார், நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் நம்முடைய ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் நன்கொடையை அளித்து எனது பணியை தொடங்கிவிட்டேன். நன்கொடை அளிப்பதில் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வரும் தலைமுறையினர் ராமரின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, அவர் மக்களுக்கு அளித்துள்ள செய்தியை பின்பற்றி தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நன்கொடை திரட்டப்படுகிறது. இந்த நிலையில் தானும் நன்கொடை வழங்கி விட்டதாக கூறியுள்ள பிரபல நடிகர் அக்ஷய் குமார், நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் நம்முடைய ஸ்ரீ ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் நன்கொடையை அளித்து எனது பணியை தொடங்கிவிட்டேன். நன்கொடை அளிப்பதில் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வரும் தலைமுறையினர் ராமரின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த பாதை, அவர் மக்களுக்கு அளித்துள்ள செய்தியை பின்பற்றி தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். ஜெய் ஸ்ரீராம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.