செய்திகள்
கோப்பு படம்.

டெல்லியில் புதிதாக 299- பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-01-16 14:18 GMT   |   Update On 2021-01-16 14:18 GMT
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 299- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 299- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 397- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 6-பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,738- ஆக உள்ளது.

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 183 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,18, 754- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 2,691-சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News