செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,145 பேருக்கு கொரோனா

Published On 2021-01-15 16:10 GMT   |   Update On 2021-01-15 16:10 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவிலேயே கேரளா மற்றம் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று புதிதாக 3145 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3,500 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 19,84,768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,81,088 பேர் குணமடைந்துள்ளனர். 50,336 உயிரிழந்துள்ள நிலையில், 52,152 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் மட்டும் இன்று 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 3,01,655 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,229 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 61,291 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,36,84,589 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News