செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் புதிய பாதிப்புகள் 16,946 - உயிரிழப்பு 198... கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-01-14 05:56 GMT   |   Update On 2021-01-14 05:56 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,946 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,12,093 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 198 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1.44 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.52 சதவீதமாக உள்ளது. 

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,13,603 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாடு முழுவதும் நேற்று வரை 18,42,32,305 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 7,43,191 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News