செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சம் பேர் மீண்டனர்

Published On 2021-01-05 01:40 GMT   |   Update On 2021-01-05 01:40 GMT
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சம் பேர் மீண்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கொரோனா பாதிப்பு தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 21 ஆயிரத்து 938 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 22ஆயிரத்து 538 ஆக அதிகரித்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் ஒருவர், பல்லாரியில் 15 பேர், பெலகாவியில் 13 பேர், பெங்களூரு புறநகரில் 10 பேர், பெங்களூரு நகரில் 298 பேர், பீதரில் 9 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர், சிக்பள்ளாப்பூரில் 19 பேர், சிக்கமகளூருவில் 7 பேர், சித்ரதுர்காவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 16 பேர், தாவணகெரேயில் 2 பேர், தார்வாரில் 15 பேர், கதக்கில் 2 பேர், ஹாசனில் 27 பேர், கலபுரகியில் 18 பேர், குடகில் 2 பேர், கோலாரில் 11 பேர், கொப்பலில் 2 பேர், மண்டியாவில் 9 பேர், மைசூருவில் 20 பேர், ராய்ச்சூரில் 8 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் 4 பேர், துமகூருவில் 8 பேர், உடுப்பியில் 9 பேர், உத்தர கன்னடாவில் 12 பேர், விஜயாப்புராவில் 11 பேர், யாதகிரியில் 9 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரு நகர், உடுப்பி, விஜயாப்புராவில் தலா ஒருவர் என 3 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 110 ஆக உயர்ந்து உள்ளது. 27 மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. நேற்று 1, 283பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 202 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து 207 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 196 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 99 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 41 லட்சத்து 96ஆயிரத்து 065 பேரின் மாதிரிகள் பரிசோதனை நடந்துள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News