செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் - 7 பேர் காயம்

Published On 2021-01-02 08:02 GMT   |   Update On 2021-01-02 08:02 GMT
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதில் பொதுமக்களில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின்  உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News