செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் புதிய பாதிப்பு 20 ஆயிரத்தைவிட குறைந்தது... கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-01-02 04:46 GMT   |   Update On 2021-01-02 04:46 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,078 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்திற்குள் இருந்தது. தற்போது 20 ஆயிரத்தைவிட குறைந்துள்ளது.  குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,05,788 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 224 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,49,218 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,06,387 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 22,926 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,50,183 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News