செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-01-02 02:05 GMT   |   Update On 2021-01-02 02:05 GMT
கர்நாடகத்தில் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 877 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு 

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 19 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 877 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மாநிலத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,084 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 97 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் 4 பேர், சிக்பள்ளாப்பூர், ராமநகரில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தனர். நேற்று 1 லட்சத்து 17 ஆயிரத்து 907 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 1 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 189 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களில் 2,106 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இதுவரை 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 1,993 பேருக்கு பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. 80 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 16 பேர், பல்லாரியில் 4 பேர், பெலகாவியில் 14 பேர், பெங்களூரு புறநகரில் 28 பேர், பெங்களூரு நகரில் 464 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 29 பேர், சிக்கமகளூருவில் 8 பேர், சித்ரதுர்காவில் 39 பேர், தட்சிண கன்னடாவில் 27 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 5 பேர், கதக்கில் 12 பேர், ஹாசனில் 20 பேர், ஹாவேரியில் 2 பேர், கலபுரகியில் 11 பேர், குடகில் 7 பேர், கோலாரில் 14 பேர், மண்டியாவில் 13 பேர், மைசூருவில் 26 பேர், சிவமொக்காவில் 20 பேர், துமகூருவில் 32 பேர், உடுப்பியில் 14 பேர், உத்தரகன்னடாவில் 16 பேர், விஜயாப்புராவில் 19 பேர், யாதகிரியில் 6 பேர் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று ராமநகர், கொப்பல் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News