செய்திகள்
மும்பையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 9 ஆனது
லால்பாக்கில் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லால்பாக் கணேஷ் கல்லி அருகே சாராபாய் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 9ம் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் மசினா மற்றும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 8 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லால்பாக் கணேஷ் கல்லி அருகே சாராபாய் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 9ம் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கிருந்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் மசினா மற்றும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே 8 பேர் பலியாகினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.