செய்திகள்
நளின்குமார் கட்டீல்

நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுகிறது: நளின்குமார் கட்டீல்

Published On 2020-12-24 02:44 GMT   |   Update On 2020-12-24 02:44 GMT
நாடு முழுவதும் இன்னும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. அவர், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜனதா 52 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் இன்னும் பிரதமர் மோடி அலை வீசுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதை அந்த மாநில மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளது இந்த தேர்தல் மூலம் வெளிப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜனதா வலுவான நிலையில் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News