செய்திகள்
கோப்பு படம்

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2020-12-21 17:18 GMT   |   Update On 2020-12-21 17:18 GMT
மத்தியபிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் இன்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பணம் செய்தனர்.

பண்டோல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News