செய்திகள்
அஜித்பவார்

பாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய வியூகம்: அஜித்பவார்

Published On 2020-12-18 02:49 GMT   |   Update On 2020-12-18 02:49 GMT
மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்க புதிய வியூகத்தை துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவித்தார்.
மும்பை :

ஜன்சுராஜ்ய கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் அதில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கட்சிக்கு வரவேற்றனர்.

அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்களது மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இழுக்க அஜித்பவார் புதிய வியூகத்தை அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

பா.ஜனதாவில் இருந்து விலகி எம்.எல்.ஏ.க்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள எந்த கட்சியில் சேர்ந்தாலும், அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது அவர்களுக்கு மகாவிகாஸ் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் ஆதரவு அளிக்கும்.

எனவே அவர்கள் தேர்தலில் எளிதில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேசியதாவது:-

10-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் செயல்பாடுகளால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். அவர்கள் எங்களிடம் பல முறை வெளிப்படையாக பேசினர். எனினும் அவர்கள் பற்றி வரும்காலத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News