செய்திகள்
மோடி அரசுக்கு முதலாளிகள் தான் நண்பர்கள் - ராகுல் காந்தி சாடல்
மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மோடி அரசைப் பொறுத்தமட்டில், கருத்துவேறுபாடுள்ள மாணவர்கள் தேச விரோதிகள். அக்கறையுள்ள குடிமக்கள், நகர்ப்புற நக்சலைட்டுகள். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரசை சுமந்து வந்து பரப்புபவர்கள். கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் ஒன்றுமே இல்லை. போராடி வரும் விவசாயிகளோ காலிஸ்தான் போராளிகள். மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மோடி அரசைப் பொறுத்தமட்டில், கருத்துவேறுபாடுள்ள மாணவர்கள் தேச விரோதிகள். அக்கறையுள்ள குடிமக்கள், நகர்ப்புற நக்சலைட்டுகள். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரசை சுமந்து வந்து பரப்புபவர்கள். கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் ஒன்றுமே இல்லை. போராடி வரும் விவசாயிகளோ காலிஸ்தான் போராளிகள். மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.