செய்திகள்
பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட்

பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை வரும் 17-ம் தேதி விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ அறிவிப்பு

Published On 2020-12-11 17:43 GMT   |   Update On 2020-12-11 17:43 GMT
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும்  17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட்டானது, தட்பவெப்ப நிலையை கவனத்தில் கொண்டு அன்று மாலை 3.41 மணியளவில் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி.எம்.எஸ்.-01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை உடன் சுமந்து செல்லும்.  
இந்திய பகுதி, அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் அலைக்கற்றை சேவைகளை வழங்குவதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.
Tags:    

Similar News