செய்திகள்
ஓட்டு போட வந்த வாக்காளர்கள் (கோப்பு படம்)

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2020-12-10 03:02 GMT   |   Update On 2020-12-10 03:02 GMT
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 5ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதில் முறையே 51.76 சதவீதம், 48.62 சதவீதம், 50.53 சதவீதம், 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இந்நிலையில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

ஜம்முவில் 20 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 17 தொகுதிகள் என மொத்தம் 37 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதுதவிர 58 பஞ்சாயத்து தலைவர், 218 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News