செய்திகள்
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2020-12-07 03:53 GMT   |   Update On 2020-12-07 03:53 GMT
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதில் முறையே 51.76 சதவீதம், 48.62 சதவீதம், 50.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இந்நிலையில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் அதிக அளவில் வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் தலா 17 தொகுதிகள் வீதம் மொத்தம் 34 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7.17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News