செய்திகள்
நடிகை சஞ்சனா

நடிகை சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?: கர்நாடக ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

Published On 2020-12-07 02:03 GMT   |   Update On 2020-12-07 02:03 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள நடிகை சஞ்சனாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுமா?, அல்லது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று தெரிந்து விடும்.
பெங்களூரு :

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் கைது செய்திருந்தனர். 

இவர்களில் நடிகை சஞ்சனா செப்டம்பர் 8-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு, 16-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், அவருக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடிகை சஞ்சனா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கர்நாடக ஐகோர்ட்டில் சஞ்சனா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. அதனால் நடிகை சஞ்சனாவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்படுமா?, அல்லது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று தெரிந்து விடும். 2½ மாதங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் சஞ்சனா தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
Tags:    

Similar News